40. கல்வி |
391. | கற்க கசடறக் கற்பவை கற்றபின் |
| நிற்க அதற்குத் தக. |
|
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும். |
392. | எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங் |
| கண்ணென்ப வாழும் உயிர்க்கு. |
|
எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள். |
393. | கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு |
| புண்ணுடையர் கல்லா தவர். |
|
கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும். |
394. | உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் |
| அனைத்தே புலவர் தொழில் |
|
மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும். |
395. | உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் |
| கடையரே கல்லா தவர். |
|
அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக்கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராகக் கருதப்படுவார்கள். |