396. | தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் |
| கற்றனைத் தூறும் அறிவு. |
|
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். |
397. | யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் |
| சாந்துணையுங் கல்லாத வாறு. |
|
கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ? |
398. | ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற் |
| கெழுமையும் ஏமாப் புடைத்து. |
|
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவனாது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். |
399. | தாமின் புறுவ துலகின் புறக்கண்டு |
| காமுறுவர் கற்றறிந் தார். |
|
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள். |
400. | கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு |
| மாடல்ல மற்றை யவை. |
|
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை. |