பக்கம் எண் :

அரசியல்82கலைஞர் உரை

406.

உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்

களரனையர் கல்லா தவர்.

 

கல்லாதவர்களைக்  களர்நிலத்துக்கு   ஒப்பிடுவதே    பொருத்தமானது.
காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.
 

407.

நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்

மண்மாண் புனைபாவை யற்று.

 

அழகான    தோற்றம்    மட்டுமே    இருந்து,  ஆழ்ந்து   தெளிந்த
அறிவில்லாமல்   இருப்பவர்கள், கண்ணைக்  கவரும் மண் பொம்மையைப்
போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.
 

408.

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட்ட திரு.

 

முட்டாள்களிடம்   குவிந்துள்ள   செல்வம்,  நல்லவர்களை   வாட்டும்
வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.
 

409.

மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்

கற்றா ரனைத்திலர் பாடு.

 

கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப்
போக்கிவிடும்.
 

410.

விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்

கற்றாரோ டேனை யவர்.

 

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே
அளவு  வேற்றுமை  அறிவு    நூல்களைப்    படித்தவர்களுக்கும்,  அந்த
நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.