406. | உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக் |
| களரனையர் கல்லா தவர். |
|
கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள். |
407. | நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம் |
| மண்மாண் புனைபாவை யற்று. |
|
அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள். |
408. | நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே |
| கல்லார்கண் பட்ட திரு. |
|
முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும். |
409. | மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் |
| கற்றா ரனைத்திலர் பாடு. |
|
கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும். |
410. | விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் |
| கற்றாரோ டேனை யவர். |
|
மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு. |