44. குற்றங்கடிதல் |
431. | செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார் |
| பெருக்கம் பெருமித நீர்த்து. |
|
இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும். |
432. | இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா |
| உவகையும் ஏதம் இறைக்கு. |
|
மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும். |
433. | தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் |
| கொள்வர் பழிநாணு வார். |
|
பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள். |
434. | குற்றமே காக்க பொருளாகக் குற்றமே |
| அற்றந் தரூஉம் பகை. |
|
குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும். |
435. | வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் |
| வைத்தூறு போலக் கெடும். |
|
முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும். |