பக்கம் எண் :

11

1. கடமையுடன் கூடிய   செயல்   புரியக்   கிளம்பியவர்கள்   இல்லற
சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெறமாட்டார்கள்.
 

2. ஏற்றுக்கொண்ட கொள்கையினைப்  பேணிக்காத்திடாமல்  பெண்ணை
நாடி  அவள்  பின்னால்  திரிபவனுடைய  நிலை   வெட்கித் தலை குனிய
வேண்டியதாக ஆகிவிடும்.
 

3. நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்துபோகிற
கணவன்  நல்லோர்  முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக
நேரிடும்.
 

4. மணம் புரிந்து புது வாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த
அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.
 

5. எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு  ஏற்பட்டுவிடக்
கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு
அஞ்சி நடப்பான்.
 

6. அறிவும்   பண்பும்   இல்லாத  மனைவி   அழகாக   இருக்கிறாள்
என்பதற்காக  மட்டும்  அவளுக்கு  அடங்கி   நடப்பவர்கள்   தங்களைத்
தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக்  காட்டிக்  கொண்டாலும்
அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது.
 

7. ஒரு  பெண்ணின்  காலைச்  சுற்றிக்கொண்டு  கிடக்கும்  ஒருவனின்
ஆண்மையைக் காட்டிலும்  மான  உணர்வுள்ள  ஒருத்தியின் பெண்மையே
பெருமைக்குரியதாகும்.
 

8. ஒரு  பெண்ணின்  அழகுக்காகவே  அவளிடம்  மயங்கி அறிவிழந்து
நடப்பவர்கள் நண்பர்களைப்பற்றியும்