பக்கம் எண் :

திருக்குறள்89பொருள்

45. பெரியாரைத் துணைக்கோடல்
 

441.

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்.

 

அறமுணர்ந்த மூதறிஞர்களின்  நட்பைப்   பெறும்   வகை   அறிந்து,
அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
 

442.

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.

 

வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல
பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
 

443.

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.

 

பெரியவர்களைப்  போற்றிப்  பாராட்டி  அவர்களுடன்    உறவாடுதல்
எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.
 

444.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையு ளெல்லாந் தலை.

 

அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய்
இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக
அமையும்.
 

445.

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

 

கண்ணாக    இருந்து     எதனையும்   கண்டறிந்து  கூறும்  அறிஞர்
பெருமக்களைச்  சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை
பயக்கும்.