446. | தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் |
| செற்றார் செயக்கிடந்த தில். |
|
அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது. |
447. | இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே |
| கெடுக்குந் தகைமை யவர். |
|
இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு? |
448. | இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் |
| கெடுப்பா ரிலானுங் கெடும். |
|
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும். |
449. | முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ் |
| சார்பிலார்க் கில்லை நிலை. |
|
கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும். |
450. | பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே |
| நல்லார் தொடர்கை விடல். |
|
நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும். |