பக்கம் எண் :

அரசியல்90கலைஞர் உரை

446.

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்த தில்.

 

அறிவும்,    ஆற்றலும்    கொண்ட    ஒருவன்,  தன்னைச்  சூழவும்
அத்தகையோரையே  கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத்   தீங்கையும்
விளைவிக்க முடியாது.
 

447.

இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே

கெடுக்குந் தகைமை யவர்.

 

இடித்துரைத்து    நல்வழி     காட்டுபவரின்   துணையைப்    பெற்று
நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?
 

448.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்.

 

குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.
 

449.

முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்

சார்பிலார்க் கில்லை நிலை.

 

கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி  நிற்கக்  கூடிய
துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில்  வருவாய்
இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.
 

450.

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.

 

நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத்
தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.