46. சிற்றினம் சேராமை |
451. | சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் |
| சுற்றமாச் சூழ்ந்து விடும். |
|
பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேரமாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள். |
452. | நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் |
| கினத்தியல்ப தாகும் அறிவு. |
|
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும். அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும். |
453. | மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் |
| இன்னா னெனப்படுஞ் சொல். |
|
ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொறுத்து அமையும். அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும். |
454. | மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற் |
| கினத்துள தாகும் அறிவு. |
|
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும். |
455. | மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் |
| இனந்தூய்மை தூவா வரும். |
|
ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும். |