பக்கம் எண் :

அரசியல்92கலைஞர் உரை

456.

மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்

கில்லைநன் றாகா வினை.

 

மனத்தின்    தூய்மையால்   புகழும்,  சேர்ந்த இனத்தின் தூய்மையால்
நற்செயல்களும் விளையும்.
 

457.

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழுந் தரும்.

 

மனத்தின்  நலம்  உயிருக்கு  ஆக்கமாக விளங்கும். இனத்தின் நலமோ
எல்லாப் புகழையும் வழங்கும்.
 

458.

மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்

கினநலம் ஏமாப் புடைத்து.

 

மனவளம்  மிக்க   சான்றோராக   இருப்பினும்   அவர்  சேர்ந்துள்ள
கூட்டத்தினரைப் பொறுத்தே வலிமை வந்து வாய்க்கும்.
 

459.

மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்

இனநலத்தி னேமாப் புடைத்து.

 

நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர்
சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக்
கூடியதாகும்.
 

460.

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉ மில்.

 

நல்ல  இனத்தைக்  காட்டிலும்  துணையாக இருப்பதும், தீய இனத்தைக்
காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.