476. | நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் |
| உயிர்க்கிறுதி ஆகி விடும். |
|
தன்னைப் பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார். |
477. | ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள் |
| போற்றி வழங்கு நெறி. |
|
வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும். |
478. | ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை |
| போகா றகலாக் கடை. |
|
எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை. |
479. | அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல |
| இல்லாகித் தோன்றாக் கெடும். |
|
இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல்திட்டங்களை வகுத்துக்கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பது போல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும். |
480. | உளவரை தூக்காத ஒப்புர வாண்மை |
| வளவரை வல்லைக் கெடும். |
|
தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும். |