பக்கம் எண் :

12

கவலைப்பட மாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றமாட்டார்கள்.
 

9. ஆணவங்கொண்ட  பெண்கள்  இடுகின்ற   ஆணைகட்கு  அடங்கி
இயங்குகின்ற  பெண் பித்தர்களிடம்  அறநெறிச்  செயல்களையோ,  சிறந்த
அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
 

10. சிந்திக்கும்    ஆற்றலும்,     நெஞ்சுறுதியும்      கொண்டவர்கள்
காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்கமாட்டார்கள்.
 

காந்தத்துக்கு   ஈர்க்கும்    தன்மையும்      இரும்புக்கு    அதனால்
ஈர்க்கப்படுந்  தன்மையும்   இருப்பது   போல்  பொதுவாகப் பெண்ணுக்கு
ஆணை  ஈர்க்கும்  கவர்ச்சியும்,  ஆணுக்குப்   பெண்ணின்  கவர்ச்சியால்
ஈர்க்கப்பட்டுப் பெண் வழிச் செல்லும் காம உணர்வும் உள்ளன.
 

இந்த அடிப்படையிற்றான்  கலைஞர்  வள்ளுவரின்  பெண்வழிச் சேறல்
எனும்  அதிகாரத்தைக்  காண்கிறார்.  அவ்வாறு  கண்ட   கலைஞர்  தம்
உரையின்   வாயிலாகப்   பழைய   உரையாசிரியர்களால்   பெண்மைக்கு
ஏற்பட்டிருந்த பழியை நீக்கியுள்ளார்.
 

4. ஊழ்
 

கடவுள், ஆன்மா ஆகிய இரண்டும் மக்களை இன்றுவரை தெளிவடைய
ஒட்டாது   குழப்பிக்    கொண்டுள்ளன.    இவை    இரண்டும்   போல்
குழப்பந்தரும் கருத்து  வேறு  எதுவுமிருப்பதாகத்  தெரியவில்லை.  சற்றுக்
கூடுதலாக ஆழ்ந்து எண்ணிப் பார்த்தால் அவைகளுக்கு அடுத்த நிலையில்
ஊழ் என்பதைக் குறிப்பிட  முடியும்.  சிலரைப்  பொருத்தவரை முன்னவை
யிரண்டையும் விட இம்மூன்றாவதற்கே  அதிகக்  குழப்பம்  அடைகின்றனர்
என்றும்