பக்கம் எண் :

அரசியல்98கலைஞர் உரை

486.

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து.

 

கொடுமைகளைக்    கண்டும்கூட  உறுதி  படைத்தவர்கள் அமைதியாக
இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத்
தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்.
 

487.

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்

துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

 

பகையை    வீழ்த்திட    அகத்தில்   சினங்கொண்டாலும்   அதனை
வெளிப்படுத்தாமல்    இடம்    காலம்   இரண்டுக்கும்    காத்திருப்பதே
அறிவுடையார் செயல்.
 

488.

செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை

காணிற் கிழக்காந் தலை.

 

பகைவர்க்கு   முடிவு    ஏற்பட்டு  அவர்கள் தாமாகவே தலைகீழாகக்
கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும்  வரையில்  தங்களின்   பகையுணர்வைப்
பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.
 

489.

எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்.

 

கிடைப்பதற்கு    அரிய     காலம்     வாய்க்கும்போது     அதைப்
பயன்படுத்திக்கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.
 

490.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.

 

காலம்    கைகூடும்    வரையில்   கொக்குப்போல்  பொறுமையாகக்
காத்திருக்கவேண்டும்.  காலம்   வாய்ப்பாகக்   கிடைத்ததும்   அது  குறி
தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.