50. இடனறிதல் |
491. | தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் |
| இடங்கண்ட பின்னல் லது. |
|
ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும். |
492. | முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் |
| ஆக்கம் பலவுந் தரும். |
|
வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும். |
493. | ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து |
| போற்றார்கண் போற்றிச் செயின். |
|
தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றிகிட்டும். |
494. | எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து |
| துன்னியார் துன்னிச் செயின். |
|
ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். |
495. | நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் |
| நீங்கின் அதனைப் பிற. |
|
தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும். |