பக்கம் எண் :

திருக்குறள்99பொருள்

50. இடனறிதல்
 

491.

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்னல் லது.

 

ஈடுபடும்   செயல்  ஒன்றும்  பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல்,
முற்றிலும் சரியான  இடத்தைத்   தேர்ந்தெடுத்து   அச்செயலில்   இறங்க
வேண்டும்.
 

492.

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்

ஆக்கம் பலவுந் தரும்.

 

வரும்பகையை   எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச்
சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.
 

493.

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்.

 

தாக்குதல்   நடத்துவதற்குரிய   இடத்தையும்  தேர்ந்து,    தம்மையும்
காத்துக்கொண்டு    பகைவருடன்   மோதினால்  வலிமையில்லாதவர்க்கும்
வலிமை ஏற்பட்டு வெற்றிகிட்டும்.
 

494.

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

துன்னியார் துன்னிச் செயின்.

 

ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை
நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.
 

495.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற.

 

தண்ணீரில்    இருக்கும்    வரையில்தான்    முதலைக்குப்    பலம்;
தண்ணீரைவிட்டு    வெளியே   வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட
அதனை விரட்டி விடும்.