51. தெரிந்து தெளிதல் |
501. | அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் |
| திறந்தெரிந்து தேறப் படும். |
|
அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும். |
502. | குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் |
| நாணுடையான் கட்டே தெளிவு. |
|
குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும். |
503. | அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால் |
| இன்மை அரிதே வெளிறு. |
|
அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்து விட இயலாது. |
504. | குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள் |
| மிகைநாடி மிக்க கொளல். |
|
ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும். |
505. | பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங் |
| கருமமே கட்டளைக் கல். |
|
ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம். |