53. சுற்றந் தழால் |
521. | பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் |
| சுற்றத்தார் கண்ணே உள. |
|
ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள். |
522. | விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா |
| ஆக்கம் பலவுந் தரும். |
|
எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும். |
523. | அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் |
| கோடின்றி நீர்நிறைந் தற்று. |
|
உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும். |
524. | சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் |
| பெற்றத்தாற் பெற்ற பயன். |
|
தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும். |
525. | கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய |
| சுற்றத்தாற் சுற்றப் படும். |
|
வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள். |