54. பொச்சாவாமை |
531. | இறந்த வெகுளியின் தீதே சிறந்த |
| உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. |
|
அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது. |
532. | பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை |
| நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. |
|
நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும். |
533. | பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத் |
| தெப்பானூ லோர்க்குந் துணிவு. |
|
மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும். |
534. | அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை |
| பொச்சாப் புடையார்க்கு நன்கு. |
|
பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை. அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை. |
535. | முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை |
| பின்னூ றிரங்கி விடும். |
|
முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும். |