பக்கம் எண் :

அரசியல்108கலைஞர் உரை

536.

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை

வாயின் அதுவொப்ப தில்.

 

ஒருவரிடம்,    மறவாமை   என்னும்   பண்பு   தவறாமல்  பொருந்தி
யிருக்குமேயானால், அதைவிட  அவருக்கு  நன்மை  தரக்கூடியது   வேறு
எதுவும் இருக்க முடியாது.
 

537.

அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்

கருவியாற் போற்றிச் செயின்.

 

மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால்,  முடியாதது  என்று
எதுவுமே இல்லை.
 

538.

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா

திகழ்ந்தார்க் கெழுமையும் இல்.

 

புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச்  செய்திடல்  வேண்டும். அப்படிச்
செய்யாமல் புறக்கணிப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை.
 

539.

இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

 

மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள்,  அப்படி
மறந்துபோய் அழிந்து  போனவர்களை  நினைத்துப்  பார்த்துத்  திருந்திக்
கொள்ள வேண்டும்.
 

540.

உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்

உள்ளிய துள்ளப் பெறின்.

 

கொண்ட  குறிக்கோளில்   ஊக்கத்துடன்   இருந்து   அதில்  வெற்றி
காண்பதிலேயே  நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது
எளிதானதாகும்.