55. செங்கோன்மை |
541. | ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும் |
| தேர்ந்துசெய் வஃதே முறை. |
|
குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும். |
542. | வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் |
| கோனோக்கி வாழுங் குடி. |
|
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது. |
543. | அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் |
| நின்றது மன்னவன் கோல். |
|
ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும். |
544. | குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன் |
| அடிதழீஇ நிற்கும் உலகு. |
|
குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும். |
545. | இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட |
| பெயலும் விளையுளுந் தொக்கு. |
|
நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும். |