பக்கம் எண் :

அரசியல்110கலைஞர் உரை

546.

வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉங் கோடா தெனின்.

 

ஓர்   அரசுக்கு  வெற்றியைத்  தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல;
குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.
 

547.

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்.

 

நீதி  வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே
காப்பாற்றும்.
 

548.

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும்.

 

ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும்  நடைபெறுகிற  அரசு
தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.
 

549.

குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில்.

 

குடிமக்களைப்   பாதுகாத்துத்  துணை  நிற்பதும், குற்றம் செய்தவர்கள்
யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின்
கடமையாகும்.
 

550.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்.

 

கொலை   முதலிய     கொடுமைகள்    புரிவோரை,    ஓர்   அரசு
தண்டனைக்குள்ளாக்குவது   பயிரின்    செழிப்புக்காகக்   களை எடுப்பது
போன்றதாகும்.