பக்கம் எண் :

அரசியல்112கலைஞர் உரை

556.

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்

மன்னாவாம் மன்னர்க் கொளி.

 

நீதிநெறி  தவறாத செங்கோன்மைதான் ஓர் அரசுக்குப் புகழைத் தரும்.
இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.
 

557.

துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்

அளியின்மை வாழும் உயிர்க்கு.

 

மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல்   அருள்  இல்லாத
அரசினால் குடிமக்கள் தொல்லைப் படுவார்கள்.
 

558.

இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா

மன்னவன் கோற்கீழ்ப் படின்.

 

வறுமையின்றி    வாழ்ந்தால்கூட   அந்த    வாழ்க்கை கொடுங்கோல்
ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத்  துன்பத்தை   விட  அதிகத்
துன்பம் தரக்கூடியது.
 

559.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்.

 

முறை தவறிச் செயல்படும் ஆட்சியில்  நீரைத்  தேக்கிப்  பயனளிக்கும்
இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும்  மழையைத் தேக்கி
வைத்து வளம் பெறவும் இயலாது.
 

560.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்.

 

ஓர்  அரசு   நாட்டை  முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள்
எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.