பக்கம் எண் :

அரசியல்114கலைஞர் உரை

566.

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்

நீடின்றி ஆங்கே கெடும்.

 

கடுஞ்சொல்லும்,     கருணையற்ற    உள்ளமும்    கொண்டவர்களின்
பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்து விடும்.
 

567.

கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம்.

 

கடுஞ்சொல்லும்,  முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத்
தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்.
 

568.

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்

சீறிற் சிறுகுந் திரு.

 

கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி
நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்.
 

569.

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்

வெருவந்து வெய்து கெடும்.

 

முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்  வேந்தன், போர்
வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.
 

570.

கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல

தில்லை நிலக்குப் பொறை.

 

கொடுங்கோல் அரசு  படிக்காதவர்களைத்  தனக்குப்  பக்க பலமாக்கிக்
கொள்ளும், அதைப்போல் பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை.