பக்கம் எண் :

அரசியல்116கலைஞர் உரை

576.

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ

டியைந்துகண் ணோடா தவர்.

 

ஒருவர்க்குக்   கண்  இருந்தும்கூட   அந்தக்  கண்ணுக்குரிய அன்பும்
இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு, ஒப்பானவரே ஆவார்.
 

577.

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்.

 

கருணை   மனம்   கொண்டவர்க்கு  இருப்பதே  கண்கள் எனப்படும்;
கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.
 

578.

கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்

குரிமை உடைத்திவ் வுலகு.

 

கடமை   தவறாமையிலும்,  கருணை   பொழிவதிலும்   முதன்மையாக
இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.
 

579.

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை.

 

அழிக்க  நினைத்திடும்  இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது
மிக உயர்ந்த பண்பாகும்.
 

580.

பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

 

கருணை  உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள்
நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.