59. ஒற்றாடல் |
581. | ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் |
| தெற்றென்க மன்னவன் கண். |
|
நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். |
582. | எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் |
| வல்லறிதல் வேந்தன் தொழில். |
|
நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும். |
583. | ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் |
| கொற்றங் கொளக்கிடந்த தில். |
|
நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை. |
584. | வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங் |
| கனைவரையும் ஆராய்வ தொற்று. |
|
ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும். |
585. | கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும் |
| உகாஅமை வல்லதே ஒற்று. |
|
சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும். |