586. | துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந் |
| தென்செயினுஞ் சோர்வில தொற்று. |
|
ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக் கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர். |
587. | மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை |
| ஐயப்பா டில்லதே ஒற்று. |
|
மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும். |
588. | ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் |
| ஒற்றினால் ஒற்றிக் கொளல். |
|
ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும். |
589. | ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர் |
| சொற்றொக்க தேறப் படும். |
|
ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம். |
590. | சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற் |
| புறப்படுத்தான் ஆகும் மறை. |
|
ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும். |