60. ஊக்கம் உடைமை |
591. | உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார் |
| உடைய துடையரோ மற்று. |
|
ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார். |
592. | உள்ள முடைமை உடைமை பொருளுடைமை |
| நில்லாது நீங்கி விடும். |
|
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது. |
593. | ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம் |
| ஒருவந்தங் கைத்துடை யார். |
|
ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள். |
594. | ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா |
| ஊக்க முடையா னுழை. |
|
உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும். |
595. | வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் |
| உள்ளத் தனைய துயர்வு. |
|
தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும். |