பக்கம் எண் :

அரசியல்122கலைஞர் உரை

606.

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது.

 

தகுதியுடையவரின்      அன்புக்குப்   பாத்திரமானவராக  இருப்பினும்
சோம்பலுடையவர்கள்    பெருமை   எனும்   பயனை   அடைவதென்பது
அரிதாகும்.
 

607.

இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து

மாண்ட உஞற்றி லவர்.

 

முயற்சி செய்வதில்  அக்கறையின்றிச்  சோம்பேறிகளாய்  வாழ்பவர்கள்
இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.
 

608.

மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னொன்னார்க்

கடிமை புகுத்தி விடும்.

 

பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி
விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.
 

609.

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்

மடியாண்மை மாற்றக் கெடும்.

 

தன்னை  ஆட்கொண்டுள்ள  சோம்பலை  ஒருவன்  அகற்றி விட்டால்,
அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.
 

610.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு.

 

சோம்பல் இல்லாதவர் அடையும் பயன்,  சோர்வில்லாத  ஒரு மன்னன்,
அவன் சென்ற இடமனைத்தையும்  தனது  காலடி  எல்லைக்குள் கொண்டு
வந்ததைப் போன்றதாகும்.