616. | முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை |
| இன்மை புகுத்தி விடும். |
|
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும். |
617. | மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் |
| தாளுளாள் தாமரையி னாள். |
|
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டப் பயன்படுவனவாகும். |
618. | பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் |
| தாள்வினை இன்மை பழி. |
|
விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும். |
619. | தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் |
| மெய்வருத்தக் கூலி தரும். |
|
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும். |
620. | ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் |
| தாழா துஞற்று பவர். |
|
"ஊழ்" என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள். |