63. இடுக்கண் அழியாமை |
621. | இடுக்கண் வருங்கால் நகுக அதனை |
| அடுத்தூர்வ தஃதொப்ப தில். |
|
சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான். |
622. | வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் |
| உள்ளத்தின் உள்ளக் கெடும். |
|
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும். |
623. | இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக் |
| கிடும்பை படாஅ தவர். |
|
துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள். |
624. | மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற |
| இடுக்கண் இடர்ப்பா டுடைத்து. |
|
தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும். |
625. | அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற |
| இடுக்கண் இடுக்கட் படும். |
|
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும். |