656. | ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க |
| சான்றோர் பழிக்கும் வினை. |
|
பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக் கூடாது. |
657. | பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர் |
| கழிநல் குரவே தலை. |
|
பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும். |
658. | கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம் |
| முடிந்தாலும் பீழை தரும். |
|
தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒருவேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும். |
659. | அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் |
| பிற்பயக்கும் நற்பா லவை. |
|
பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும். |
660. | சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் |
| கலத்துணீர் பெய்திரீஇ யற்று. |
|
தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான். |