67. வினைத்திட்பம் |
661. | வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம் |
| மற்றைய எல்லாம் பிற. |
|
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது. |
662. | ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் |
| ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். |
|
இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம். |
663. | கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் |
| எற்றா விழுமந் தரும். |
|
செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும். |
664. | சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் |
| சொல்லிய வண்ணம் செயல். |
|
சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம். |
665. | வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் |
| ஊறெய்தி உள்ளப் படும். |
|
செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத்திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும். |