பக்கம் எண் :

அமைச்சியல்136கலைஞர் உரை

676.

முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்.

 

ஈடுபடக்கூடிய  ஒரு  செயலால்  எதிர்பார்க்கப்படும்  பயன், அதற்கான
முயற்சிக்கு  இடையே   வரும்   தடைகள், அச்செயலாற்றுவதற்கான முறை
ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
 

677.

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளங் கொளல்.

 

ஒரு    செயலில்    ஈடுபடுகிறவன், அச் செயல்குறித்து   முழுமையாக
உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.
 

678.

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று.

 

ஒரு    செயலில்  ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு
செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு
யானையைப் பிடிப்பது போன்றதாகும்.
 

679.

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

 

நண்பருக்கு  நல்லுதவி  செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத்
தம்முடன்   பொருந்துமாறு   சேர்த்துக்   கொள்ளுதல் விரைந்து செய்யத்
தக்கதாகும்.
 

680.

உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற்

கொள்வர் பெரியார்ப் பணிந்து.

 

தம்மைவிட     வலிமையானவர்களை    எதிர்ப்பதற்குத்    தம்முடன்
இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும்  பலன்  கிட்டுமானால்
அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்.