பக்கம் எண் :

16

ஈ. உரைக் குறள்
 

பாட்டும் குறள்; அதற்குக் கலைஞர் வகுத்த உரையும் குறளாக
அமைந்திருப்பதை அடுத்துக் காண்க.
 

1305.

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை 

பூஅன்ன கண்ணா ரகத்து. 

 

மலர்  விழி  மகளிர்   நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல
காதலர்க்கு அழகு சேர்க்கும்.
 

உ. இடைமிடை சொல்நலம்
 

இடையில்   சில  சொற்களைச்  சேர்ப்பதன்    வாயிலாகக்   குறளின்
பொருளில் நேரும் முட்டறுக்கும் பெற்றியைப் பின் உள்ள பகுதி காட்டும்.
 

94.

துன்புறூஉந் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் 

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. 

 

இன்சொல் பேசி எல்லாரிடத்திலும் கனிவுடன்  பழகுவோர்க்கு  நட்பில்
வறுமை எனும் துன்பமில்லை.
 

83.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை 

பருவந்து பாழ்படுதல் இன்று. 

 

விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின்  வாழ்க்கை  அதன்
காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.
 

1052.

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை 

துன்பம் உறாஅ வரின். 

 

வழங்குபவர்,  வாங்குபவர்   ஆகிய   இருவர்   மனத்திற்கும் துன்பம்
எதுவுமின்றி   ஒருபொருள்   கிடைக்குமானால்    அப்பொருள்   இரந்து
பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்.