686. | கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் |
| தக்க தறிவதாந் தூது. |
|
கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்வபனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான். |
687. | கடனறிந்து காலங் கருதி இடனறிந் |
| தெண்ணி உரைப்பான் தலை. |
|
ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான். |
688. | தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் |
| வாய்மை வழியுரைப்பான் பண்பு. |
|
துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும். |
689. | விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம் |
| வாய்சோரா வன்க ணவன். |
|
ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும். |
690. | இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற் |
| குறுதி பயப்பதாம் தூது. |
|
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான். |