பக்கம் எண் :

அமைச்சியல்146கலைஞர் உரை

726.

வாளொடன் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்

நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
 

கோழைகளுக்குக்  கையில்  வாள்  இருந்தும்  பயனில்லை;  அவையில்
பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.
 

727.

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்

தஞ்சு மவன்கற்ற நூல்.
 

அவை நடுவில் பேசப்  பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப்
படித்திருந்தாலும்  அந்த  நூல்கள்   அனைத்தும்   போர்க்களத்தில்  ஒரு
பேடியின்   கையில்    உள்ள    கூர்மையான    வாளைப்    போலவே
பயனற்றவைகளாகி விடும்.
 

728.

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்

நன்கு செலச்சொல்லா தார்.
 

அறிவுடையோர்  நிறைந்த  அவையில்,  அவர்கள்  மனத்தில்  பதியும்
அளவுக்குக் கருத்துகளைச்  சொல்ல  இயலாவிடின், என்னதான் நூல்களைக்
கற்றிருந்தாலும் பயன் இல்லை.
 

729.

கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்

நல்லா ரவையஞ்சு வார்.
 

ஆன்றோர்   நிறைந்த   அவையில்  பேசுவதற்கு  அஞ்சுகின்றவர்கள்,
எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களைவிட
இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்.
 

730.

உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார்.
 

தாம் கற்றவைகளைக்  கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல்
அவைக்கு   அஞ்சுவோர்,   உயிரோடு  இருந்தாலும்கூட  இறந்தவருக்குச்
சமமானவராகவே கருதப்படுவார்கள்.