ஊ. தெளிவு |
உரைத் தெளிவுக்கு, |
1162. | கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு |
| உரைத்தலும் நாணுத் தரும். |
|
காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை. |
எ. சுருக்க விளக்கம் |
சுருக்க விளக்கத்துக்கு, |
1317. | வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் |
| யாருள்ளித் தும்மினீர் என்று. |
|
தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள். உடனே என்ன சந்தேகமோ "யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்"என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்- என்பதையும் கண்டின்புறலாம். |
ஏ. புதுப்பொருள் |
அருஞ்சொற் பொருள் கொள்வதில் கலைஞர் கண்ட நேர்மை பிறழாப் புதுமைக்குப் பின்வரும் பகுதிகள் சான்று கூறுகின்றன. |
98. | சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் |
| இம்மையும் இன்பந் தரும். |
|
சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும். |
புத்தேளிர் என்னும் சொல் புதுமை என்பதனடியாகப் பிறந்தது எனக் கொண்டு பொருள் தந்து மருட்கை |