736. | கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா |
| நாடென்ப நாட்டின் தலை. |
|
எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும். |
737. | இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் |
| வல்லரணும் நாட்டிற் குறுப்பு. |
|
ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும். |
738. | பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் |
| அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. |
|
மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும். |
739. | நாடென்ப நாடா வளத்தன நாடல்ல |
| நாட வளந்தரும் நாடு. |
|
இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளை விட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும். |
740. | ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே |
| வேந்தமை வில்லாத நாடு. |
|
நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும். |