தெளிவிக்கும் மாட்சிக்குக் கீழ்க் காணப்படும் பகுதிகள் எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன. |
58. | பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் |
| புத்தேளிர் வாழும் உலகு. |
|
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும். |
213. | புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே |
| ஒப்புரவின் நல்ல பிற. |
|
பிறர்க்கு உதவிடும் பண்பாகிய "ஒப்பரவு" என்பதை விடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும் இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது. |
1323. | புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு |
| நீரியைந் தன்னா ரகத்து. |
|
நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதைவிடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா? |
234. | நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் |
| போற்றாது புத்தேள் உலகு. |
|
இனிவரும் புதிய உலகம்கூட, இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது. |
இவற்றுள் ஈற்றில் இடம்பெற்றுள்ள பகுதி புத்தம்புதிய விழுமிய கருத்தையளிக்கும் உரையாகவும் இலங்குவதைக் காணமுடியும். |
அய். புத்தம்புது விளக்கம் |
புதுமை மணங்கமழும் அத்தகைய வேறு சில பொருளுரைகட்கு, |