81. பழைமை |
801. | பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும் |
| கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. |
|
பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான். |
802. | நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற் |
| குப்பாதல் சான்றோர் கடன். |
|
பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும். |
803. | பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை |
| செய்தாங் கமையாக் கடை. |
|
பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத் தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப் போகும். |
804. | விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் |
| கேளாது நட்டார் செயின். |
|
பழகிய நட்பின் உரிமை காரணமாகத் தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார். |
805. | பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க |
| நோதக்க நட்டார் செயின். |
|
வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். |