82. தீ நட்பு |
811. | பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை |
| பெருகலிற் குன்றல் இனிது. |
|
நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது. |
812. | உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை |
| பெறினும் இழப்பினும் என். |
|
தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்து விட்டுப் பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன? |
813. | உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது |
| கொள்வாரும் கள்வரும் நேர். |
|
பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும், ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள். |
814. | அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார் |
| தமரின் தனிமை தலை. |
|
போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும். |
815. | செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை |
| எய்தலின் எய்தாமை நன்று. |
|
கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம். |