816. | பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் |
| ஏதின்மை கோடி உறும். |
|
அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும். |
817. | நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் |
| பத்தடுத்த கோடி உறும். |
|
சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும், பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும். |
818. | ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை |
| சொல்லாடார் சோர விடல். |
|
நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும். |
819. | கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு |
| சொல்வேறு பட்டார் தொடர்பு. |
|
சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு, கனவிலே கூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும். |
820. | எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ |
| மன்றிற் பழிப்பார் தொடர்பு. |
|
தனியாகச் சந்திக்கும் போது இனிமையாகப் பழகி விட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு, தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். |