84.பேதைமை |
831. | பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண் |
| டூதியம் போக விடல். |
|
கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும். |
832. | பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை |
| கையல்ல தன்கண் செயல். |
|
தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும். |
833. | நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் |
| பேணாமை பேதை தொழில். |
|
வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும். |
834. | ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் |
| பேதையிற் பேதையார் இல். |
|
படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது. |
835. | ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் |
| தான்புக் கழுந்தும் அளறு. |
|
தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக் காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும். |