836. | பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் |
| பேதை வினைமேற் கொளின். |
|
நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர். |
837. | ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை |
| பெருஞ்செல்வம் உற்றக் கடை. |
|
அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல், பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது. |
838. | மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன் |
| கையொன் றுடைமை பெறின். |
|
நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால், பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும். |
839. | பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் |
| பீழை தருவதொன் றில். |
|
அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து பிரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை. |
840. | கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர் |
| குழாஅத்துப் பேதை புகல். |
|
அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள், நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது. |