பக்கம் எண் :

நட்பியல்168கலைஞர் உரை

836.

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்

பேதை வினைமேற் கொளின்.
 

நேர்மை  வழி  அறியாத  மூடர்,  மேற்கொண்ட  செயலைத்  தொடர
முடியாமல், அதனால்   அச்செயலும் கெட்டுத்   தம்மையும்   தண்டித்துக்
கொள்வர்.
 

837.

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை

பெருஞ்செல்வம் உற்றக் கடை.
 

அறிவில்லாப்  பேதைகளிடம்  குவியும்  செல்வம்,  அயலார்  சுருட்டிக்
கொள்ளப்      பயன்படுமேயல்லாமல்,     பசித்திருக்கும்     பாசமுள்ள
சுற்றத்தாருக்குப் பயன்படாது.
 

838.

மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்

கையொன் றுடைமை பெறின்.
 

நல்லது கெட்டது  தெரியாதவன்  பேதை;  அந்தப் பேதையின் கையில்
ஒரு  பொருளும்  கிடைத்துவிட்டால்,  பித்துப் பிடித்தவர்கள்  கள்ளையும்
குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்.
 

839.

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன் றில்.
 

அறிவற்ற  பேதைகளுடன்  கொள்ளும்  நட்பு  மிகவும் இனிமையானது;
ஏனென்றால்    அவர்களிடமிருந்து   பிரியும்போது   எந்தத்   துன்பமும்
ஏற்படுவதில்லை.
 

840.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்

குழாஅத்துப் பேதை புகல்.
 

அறிஞர்கள் கூடியுள்ள  மன்றத்தில் ஒரு  முட்டாள், நுழைவது என்பது,
அசுத்தத்தை  மிதித்த  காலைக்  கழுவாமலே   படுக்கையில்  வைப்பதைப்
போன்றது.