846. | அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின் |
| குற்றம் மறையா வழி. |
|
தமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும். |
847. | அருமறை சோரும் அறிவிலான் செய்யும் |
| பெருமிறை தானே தனக்கு. |
|
நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந் துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள். |
848. | ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் |
| போஒம் அளவுமோர் நோய். |
|
சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும். |
849. | காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் |
| கண்டானாம் தான்கண்ட வாறு. |
|
அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான். |
850. | உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் |
| தலகையா வைக்கப் படும். |
|
ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் "பேய்"களின் பட்டியலில்தான் வைக்க வேண்டும். |