86. இகல் |
851. | இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் |
| பண்பின்மை பாரிக்கும் நோய். |
|
மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும். |
852. | பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி |
| இன்னாசெய் யாமை தலை. |
|
வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும். |
853. | இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் |
| தாவில் விளக்கம் தரும். |
|
மனமாறுபாடு என்னும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும். |
854. | இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் |
| துன்பத்துள் துன்பங் கெடின். |
|
துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும். |
855. | இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே |
| மிகலூக்கும் தன்மை யவர். |
|
மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை. |