பக்கம் எண் :

நட்பியல்172கலைஞர் உரை

856.

இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை

தவலும் கெடலும் நணித்து.
 

மாறுபாடு  கொண்டு  எதிர்ப்பதால்  வெற்றி   பெறுவது  எளிது  என
எண்ணிச்  செயல்படுபவரின்    வாழ்க்கை,    விரைவில்    தடம்புரண்டு
கெட்டொழியும்.
 

857.

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்

இன்னா அறிவி னவர்.
 

பகை   உணர்வு   கொள்ளும்   தீய   அறிவுடையவர்கள்  வெற்றிக்கு
வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.
 

858.

இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை

மிகலூக்கின் ஊக்குமாங் கேடு.
 

மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு  நீக்கிக்  கொண்டால்
நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக  ஊக்கப்படுத்தி வளர்த்துக்
கொண்டால் தீமையும் விளையும்.
 

859.

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை

மிகல்காணும் கேடு தரற்கு.
 

ஒருவன்  தனக்கு  நன்மை  வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே
இருப்பான். ஆனால் தனக்குத்  தானே  கேடு  தேடிக்  கொள்வதென்றால்
அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்.
 

860.

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்

நன்னயம் என்னும் செருக்கு.
 

மனமாறுபாடு  கொண்டு  பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள்
தொடரும்.  நட்புணர்வோடு  செயல்படுவோர்க்குப்  பெரு  மகிழ்ச்சி எனும்
நற்பயன் விளையும்.