87. பகை மாட்சி |
861. | வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா |
| மெலியார்மேல் மேக பகை. |
|
மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும். |
862. | அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான் |
| என்பரியும் ஏதிலான் துப்பு. |
|
உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்? |
863. | அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் |
| தஞ்சம் எளியன் பகைக்கு. |
|
அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான். |
864. | நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் |
| யாங்கணும் யார்க்கும் எளிது. |
|
சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம். |
865. | வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் |
| பண்பிலன் பற்றார்க் கினிது. |
|
நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான். |