866. | காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் |
| பேணாமை பேணப் படும். |
|
சிந்திக்காமலே சினம் கொள்பவனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம். |
867. | கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து |
| மாணாத செய்வான் பகை. |
|
தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும். |
868. | குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க் |
| கினனிலனாம் ஏமாப் புடைத்து. |
|
குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார். |
869. | செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா |
| அஞ்சும் பகைவர்ப் பெறின். |
|
அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும். |
870. | கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் |
| ஒல்லானை ஒல்லா தொளி. |
|
போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலிபுரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும். |