88. பகைத்திறம் தெரிதல் |
871. | பகையென்னும் பண்பி லதனை ஒருவன் |
| நகையேயும் வேண்டற்பாற் றன்று |
|
பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக் கூடாது. |
872. | வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க |
| சொல்லேர் உழவர் பகை. |
|
படைக்கலன்களை உடைய வீரர்களிடம்கூடப் பகை கொள்ளலாம். ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது. |
873. | ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் |
| பல்லார் பகைகொள் பவன். |
|
தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும். |
874. | பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் |
| தகைமைக்கண் தங்கிற் றுலகு. |
|
பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும். |
875. | தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன் |
| இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று. |
|
தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும். |