876. | தேறினுந் தேறா விடினும் அழிவின்கண் |
| தேறான் பகாஅன் விடல். |
|
பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லா விட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகைகொண்டும் இருப்பதே நலமாகும். |
877. | நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க |
| மென்மை பகைவர் அகத்து. |
|
தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது. |
878. | வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் |
| பகைவர்கண் பட்ட செருக்கு. |
|
வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும். |
879. | இளைதாக முள்மரம் கொல்க களையுநர் |
| கைகொல்லும் காழ்த்த இடத்து. |
|
முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல், பகையையும், அது முற்றுவதற்குமுன்பே வீழ்த்திவிட வேண்டும். |
880. | உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் |
| செம்மல் சிதைக்கலா தார். |
|
பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது. |