பக்கம் எண் :

2

மறுப்பாளர்   அல்லது  கடவுள்   நம்பிக்கையாளர்  எனும்  வாதத்திற்குள்
சிக்கவைக்க  நான்   விரும்பவில்லை.  "வழிபாடு"   எனும்  அதிகாரத்தில்
அமைந்துள்ள குறட்பாக்களுக்கு நான்  எழுதியுள்ள உரைகளைக்  கொண்டு
இதனை உணரலாம்.
 

மற்றும்  நான்  தரவேண்டிய   விளக்கங்கள்   பலவற்றை இந்நூலினை
வெளியிடும்  திருமகள்  நிலையத்தார்  சார்பாகப்  பதிப்புரை  தீட்டியுள்ள
முனைவர் திரு. நன்னன் அவர்கள்  சுட்டிக்  காட்டியுள்ளார். பதிப்புரையை
ஏறத்தாழ ஒரு  மதிப்புரையாகவே   எழுதியுள்ள    தமிழறிஞர்  நன்னன்
அவர்கட்கு என் நன்றி.
 

அணிந்துரையை  அழகு தமிழ்க் கவியுரையாகவே வடித்துள்ள இனமான
ஏந்தல் பேராசிரியப் பெருந்தகை அன்பழகனார் அவர்களுக்கு  என்  நன்றி
உரியதாகுக.
 

தமிழ்க்கனிப்பதிப்பகத்திற்கு  உரிமையுடைய  இந்நூலின்  முதற்பதிப்பை
வெளியிட  முன்வந்து   அழகுறத்  தமிழ்  மக்களின்  பால்  வழங்கியுள்ள
திருமகள்  நிலைய  உரிமையாளர் திரு.இராமநாதன் அவர்களுக்கும்  நன்றி
சொல்லி, இந்நூலை என் தமிழுக்குக் காணிக்கை ஆக்கித் தமிழ்மக்களுக்குப்
படைக்கின்றேன்.
 

அன்புள்ள

கலைஞர் மு. கருணாநிதி